சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் நடந்த வல்வில் ஓரி விழாவின்போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட கார்களில் நேற்று புறப்பட்டு சென்றனர். அதே போல், ஈரோட்டில் இருந்து கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க, பத்துக்கும் மேற்பட்ட கார்களில் மற்றொரு சமூகத்தினர் சென்று கொண்டிருந்தனர். சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை ரவுண்டானாவில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.