பெரம்பூர்: பெரம்பூர் தீட்டி தோட்டம் மூன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் பெல் என்கின்ற கமலக்கண்ணன் (32). பெரம்பூர் நீளம் தோட்டம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் சரோ என்கின்ற சரவணன் (33). இவர்கள் இரண்டு பேரும் திருவிக நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். இவர்களில் கமலக்கண்ணன் மீது இரண்டு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோன்று, சரவணன் மீது இரண்டு கொலை, வழக்கு ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 6 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கமலக்கண்ணன் மற்றும் சரவணன் இரண்டு பேரும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் புளியந்தோப்பு காவல் துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து, ‘நாங்கள் இனி குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்’ என பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.