ஈரோடு: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவு நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.