சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின கொண்டாடங்கள் மெரினா கடற்கரையில் நடைபெறுவது வழக்கம், அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.