மதுரை: மதுரை தோப்பூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கில் தொடர் மழையால் 1000 டன் அளவிற்கு நெல் மூட்டைகள் சேதமடைந்திருக்கின்றன. மதுரை அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இந்த சேமிப்பு நிலையங்களில் இருந்து தான் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் அனுப்பி வைக்கப்படும். அந்த அளவுக்கு மிகப்பெரிய சேமிப்பு கிடங்காக இந்த நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு இருக்கிறது.