சென்னை: சென்னை போரூர் பகுதிகளில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ. 11.37 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மின்வாரியத்தின் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், சென்னை தெற்கு-1 மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட போரூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டபோது, 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.