12 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு; ரூ. 11.37 லட்சம் இழப்பீடு வசூல்

சென்னை: சென்னை போரூர் பகுதிகளில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ. 11.37 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மின்வாரியத்தின் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், சென்னை தெற்கு-1 மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட போரூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டபோது, 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ. 10,65,685 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ. 72,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்’என கூறப்பட்டுள்ளது.

Related Stories: