விருந்தினர் இல்லத்துக்கு நிலம் வழங்கிய முதல்வருக்கு நாகாலாந்து முதல்வர் நன்றி

சென்னை: நாகாலாந்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனைகளுக்கு அதிகம் பேர் வருகிறார்கள். நாகாலாந்தை சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தை நாகாலாந்து அரசுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கி உள்ளது.  

இதற்கு நன்றி தெரிவித்து, நாகாலாந்து முதல்வர் நிஃபியு ரியோ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ”மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: