சென்னை: ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பி.எஸ். வழக்கு நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4ல் விசாரிக்க உள்ளார். ஓ.பி.எஸ்., வைரமுத்து ஆகியோர் வழக்குகளை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.