சென்னை: தொகுப்பு வீடுகள் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றியவர் பழனி (60). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, செய்யூர் அடுத்த லத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியுள்ளார். அப்போது, தமிழக அரசின் இலவச தொகுப்பு வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறை கேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.