திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் - 6 டீ - ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6பி மூலம் தெரிவித்துக்கொள்ளலாம். மேலும், வாக்காளர் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள்; மூலமாகவும் சமர்ப்பித்துக்கொள்ளலாம்.