தென்றல் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி; அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் 9வது வார்டு தென்றல் நகர் பகுதியில் தென்றல் நகர மேற்கு வடக்கு பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பாக குண்டு குழியுமான சாலைகளை புதிதாக அமைப்பதற்கான கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 21லட்சம் மதிப்பீட்டுல் சுமார் 350மீ தூரம் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் அனுமதி பெறப்பட்டு அதன் பணிகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயக்குமார், துணை மேயர் சூர்யக்குமார், மண்டல குழு தலைவர் அமுதா சேகர், ஆவடி கிழக்கு பகுதி கழக செயலாளர் பேபி சேகர், மாவட்ட பொறுப்பு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: