மதுரை: ஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், அ.புதுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு வீட்டு வரி ரசீதை அழகாபுரி ஊராட்சி தலைவர் வழங்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ஊராட்சித் தலைவர்கள் அரசியல் பின்புலத்தில் இயங்கக்கூடாது என்பதை பின்பற்ற வேண்டும்.