சென்னை: கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை மெரினா கடலில் 134 அடி உயரத்திற்கு கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமையவுள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்