டெல்லி: 11 வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஆகிய இரு அவைகளும் தினம்தோறும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறன. இந்த சூழ்நிலையில் இன்று 11வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி இருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் அதன்பின் அவை இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. அந்த சமயத்தில் எதிர் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கி விட்டனர். மாநிலங்களவையில் முழக்கங்கள் எடுத்த உடனே எதிர்கட்சிகள் பலமுறை அவை தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்தும் அதை ஏற்று கொள்ளாததால் உடனடியாக அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் சிவசேனா, சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதால் விவாதம் தேவையென அதே கட்சியை சேர்ந்த பிரியங்கா சந்துருவேதி ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருக்கிறார்.