சென்னை : சென்னை பெரம்பூரில் வீட்டில் பொருத்தப்பட்ட குளிர்சாதனம் வெடித்து சிதறிய விபத்தில் புது மாப்பிள்ளையான பால் வியாபாரி உடல் கருகி உயிரிழந்தார். திருவிக மணவாளன் நகரை சேர்ந்தவர் ஷியாம், இவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் என்பதால் மனைவி தனலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் உள்ள தரைத்தளத்தில் உள்ள படுக்கையறையில் ஷியாம் படுத்து தூங்கியுள்ளார்.