மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் விழாவுக்கு போடப்பட்டிருந்த சீரியல் செட் மீது மோதி சேதப்படுத்தாமல் பாகுபலி காட்டுயானை குனிந்த சென்ற காட்சி பக்தர்கள், மற்றும் பொதுமக்களை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துறை, குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது.