அரக்கோணம் : அரக்கோணம் அருகே பனை மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயன்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களைதேடிவருகின்றனர். தமிழகம் முழுவதும் நிலத்தடி நீருக்கு வழிவகை செய்யும் பனை மரங்களை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வெட்டுவோர் மீது வழக்குப்பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் ஊராட்சி ராஜாபாளையம் பகுதியில் சிலர் பனை மரங்களை வெட்டி கடத்துவதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் இரவு அரக்ேகாணம் தாசில்தார் பழனிராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயபால், விஏஓ மனோன்மணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.