நெல்லை: நெல்லை அருகே லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகில் உள்ள பேரிகார்டர் மீது மோதாமல் இருப்பதற்காக, லாரியை திருப்பிய பொழுது இந்த கோரா விபத்து நிகழ்ந்தது. பாண்டிச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு லாரி ஒன்று சவுக்கு கட்டைகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. அதிவேகமாக வந்த லாரி, சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்ட பேரிகார்ட் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பியபொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.