உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை வன சரகத்தில், குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். சாலை வசதியில்லாததால் அவசர மருத்துவ தேவைக்கு, அப்பர் ஆழியாறு, காடம்பாறை வழியாக, 55 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே, கர்ப்பிணிகள், நோயாளிகளை தொட்டில் கட்டி, பல மணி நேரம் கரடுமுரடான பாதையில் தூக்கி வந்து, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது உடுமலை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது.