சென்னை: பெண்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மன தைரியத்தாலும், தன்னம்பிக்கையாலும் தான் அரசியல் ஆசனத்தில் அமர்ந்தார் ஜெயலலிதா. நாங்கள் எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டு பொறுமையோடு போராடித் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கிறோம். ஒரு பெண்ணாக இவை அனைத்தையும் சமாளித்து இன்றைக்கு உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.