ராசேந்திர சோழனின் பெருமைகளை உலகிற்கு உணர்த்திட செய்வோம்: முதல்வர் டிவிட்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராசேந்திரசோழன் பிறந்த ஆடித் திருவாதிரை நாளினை அரசு விழாவாகக் கொண்டாடுவதென நமது திராவிடன் மாடல் அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் நேற்று சிறப்பான முறையில் விழா நடைபெற்றுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தையும் அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற பெருமைமிகு கோயிலையும் எழுப்பி, மக்கள் நலனுக்கான திறமைமிகு நிர்வாகத்தை அளித்த ராசேந்திர சோழனின் பெருமைகளையும் பழந்தமிழ்நாட்டின் சிறப்புகளையும் உலகிற்கு உணர்த்திடச் செய்வோம்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: