டெல்லி : குரங்கு அம்மை நோய் தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் இந்திய மண்டல இயக்குனர் பூனம் கேத்ராப்பால் இந்த எச்சரிப்பு செய்தியை அறிவித்துள்ளார். 75 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கு அம்மை நோய் பதிவாகாத நாடுகளிலும் பரவத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கு அம்மை தொற்று அதி வேகத்தில் பரவி வருவது உறுதியாகி இருப்பதாக பூனம் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா உடனடியாக குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.