செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை அருகில் உள்ள நடராஜபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடி திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, கூழ் வார்த்தல் சிறப்பு அலங்காரம் போன்ற நிகழ்ச்சிகள் கோயில் நிர்வாகி தேவியம்மாள் தலைமையில் நடந்தது. இதில், அப்பகுதி மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாட்டினை, மருளாடி எம்.அம்பிகா மற்றும் நடராஜபுரம் திருநங்கைகள் நலச்சங்கம் செய்திருந்தது.