ஜனாதிபதி பணியை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்த்துக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: ஜனாதிபதி பணியை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதியாக வெற்றிகரமாக தனது பணியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய வாழ்த்து கடிதத்தில்,‘நாட்டின் ஜனாதிபதியாக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 2021ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன். நாட்டின் ஜனாதிபதியாக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: