திருத்துறைப்பூண்டி : நெடும்பலம் அரசு விதை பண்ணையில் நடைபெற்றுள்ள 14 ஏக்கர் தக்கைப்பூண்டு சாகுபடியை விதைச்சான்று உதவி இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் சுமார் 55 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு சாகுபடி செய்யும் நெல்ரகங்கள் விதைக்கு பயன்படுத்தப்படும். இந்த பண்ணையில் கடந்த ஆண்டு 15 ஏக்கர் இயற்கை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டு வயலில் தக்கைப்பூண்டு உற்பத்தி செய்து வளர்ந்த பிறகு, அதை பசுந்தாள்உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.