புதுடெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை அவர் பெற்றுள்ளார். பின்னர் உரை நிகழ்த்திய திரவுபதி முர்மு, பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. தன்னை தேர்ந்தெடுத்த எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் புதிய அத்தியாயம். நீங்கள் அனைவரும் என்மீது வைத்த நம்பிக்கையே என் பலம்.நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். ஒடிசாவில் சிறு கிராமத்தில் இருந்து என்பது வாழக்கை தொடங்கியது. ஆதிவாசிகளும் கனவு கண்டு வெற்றி பெற முடியும் என்பதற்கு நானே உதாரணம்.