கால் தடுக்கி விழுந்ததில் புழல் சிறை கைதி பலி

புழல்: புழல் மத்திய சிறையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தரணிராஜன் (எ) பாண்டியனை (52) கடந்த 22ம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.நேற்று காலை அறையில் இருந்து பாண்டியன் வெளியே நடந்து வந்துள்ளார். அப்போது அவர் கால் தடுக்கி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை சக கைதிகள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: