வெள்ளி வென்ற ஈட்டி மனிதர்: நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்  நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனைக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில்  சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்’ எனத்தெரிவித்துள்ளார்.

Related Stories: