சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வரும் 30ம்தேதி நடக்கிறது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் கொரோனா மற்றும் டெங்கு பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் தடுப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க மாநகராட்சி மாமன்ற கூட்டம் கூட உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வரும் 30ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மேயர் பிரியா தலைமையில், துணைமேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன் தீப்சிங் பேடி முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.