மும்பை: சிவசேனாவின் வில்-அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் எனபதற்கான ஆதாரத்தை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் சமர்பிக்கும்படி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜ.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து முதல்வராகி இருக்கிறார். சிவசேனாவின் மொத்த 55 எம்.எல்.ஏக்களில் 40 எம்எல்ஏ.க்கள் தன் பக்கம் இருப்பதாக கூறியுள்ள ஷிண்டே, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று அறிவித்து, இக்கட்சியின் தேர்தல் சின்னமான வில்-அம்பை தங்களுக்கே ஒதுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.