இரசாயன உர பயன்பாட்டை குறைத்து விளைச்சலை அதிகரிக்க பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி வேண்டும்-விதைச்சான்று அதிகாரி பேட்டி

மன்னார்குடி : இரசாயன உர பயன்பாட்டை குறைத்து வயல்களில் விளைச்சலை அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெயப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் விதைக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரப் பயிரான தக்கை பூண்டை திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெயப் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குறித்து அவர் கூறுகையில், மண் வளத்தை பெருக்க கரிம அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. தழைச் சத்துகளில் அதிகளவில் கரிம சத்துகள் உள்ளதால், பயிர்கள் சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, உழவு செய்ய வேண்டும். தக்கை பூண்டு, சணப்பை, கொழுஞ்சி மற்றும் மணிலா அகத்தி உட்பட பல்வேறு வகையான பசுந்தாள் உரப்பயிர்கள் உள்ளன.

இவற்றில் ஏதேனும் ஒன்றை, ஏக்கருக்கு 15 கிலோ விதைகள் வீதம் விதைத்து, செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் பருவத்தில் நிலத்துடன் மடக்கி உழவு செய்துவிட வேண்டும்.

பசுந்தாள் உரங்களில் தழைச்சத்துகள் அதிகளவில் காணப்படுவதால் மண்ணிலுள்ள கரிம அளவு உயர்ந்து மண்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் மண்ணின் அடர்த்தி குறைந்து உழவு ஓட்டுவது முதல், சாகுபடிக் கான அனைத்து பணிகளும் சுலப மாகி, கூலி ஆட்களின் தேவையும் குறைந்து, செலவும் கணிசமாக குறைகிறது. இதனால், நிலத்தில் தண்ணீ ரும் நிலை நிறுத்தப்படும் சிக்கனமாக பாய்ச்சினால் போதுமானதாகும்.

பசுந்தாள் உரப்பயிர்களின் வளர்ச்சிக்கு அதிகளவு தண்ணீர் தேவையில்லை என்பதால் தெளிப்பான் மூலம் வாரத்துக்கு ஒருநாள் பாய்ச்சினால் போதுமான தாகும். இவ்வாறு சாகுபடி பயிரிடப்படும் பசுந்தாள் உரங்கள் மக்கும்போது சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது. இதனால், மற்ற பயிர்கள் சாகுபடி யின் போது இரசாயன உர பயன்பாட்டை குறைத்து தேவையற்ற செலவுகள் குறைவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் கட்டுப் படுத்தப்படுகிறது.

பசுந்தாள் உரம் சாகுபடிக்கு பெரியளவு பராமரிப்பு மற்றும் செலவு தேவை யில்லை என்பதால் விவசாயிகள் கட்டாயமாக இதனை செய்ய வேண்டும். தற்போது தண்ணீர் பாய வசதியில்லாமல் குறுவை சாகுபடி செய்யா மல் உள்ள விவசாயிகள் சம்பா நெல் பயிர் சாகுபடி ஒரு மாதத்துக்கு முன் பசுந் தாள் உர விதையினை விதை த்து அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்தால்; மண் வளத்தை காத்து அதிக லாபம் பெறலாம்.இவ்வாறு ஜெயப் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆய்வின் போது அரசு விதைப்பண்ணை வேளாண்மை அலுவலர்கள் செந்தில், பாஸ்கர் மற்றும் விதைச்சான்று அலுவலர் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: