ஆவடி: கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருநின்றவூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி பவானி (35). கேட்டரிங் வேலை செய்கிறார். பவானி, தனது கணவருக்கு தெரியாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருநின்றவூர், மேட்டு தெருவை சேர்ந்த விஜயலக்ஷ்மி (45) என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களாக பவானி வட்டிகூட தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், விஜயலக்ஷ்மி, பவானியிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.