சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் தலைமையகத்தில் மாநில துணை தலைவர் ஹாலித் முகமது நேற்று அளித்த ேபட்டி: பாஜவின் 8 வருட ஆட்சியில் நம் தேசத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய மக்களாட்சி தத்துவம், ஜனநாயகம், அரசியலமைப்பு சாசன சட்டம், நீதி பரிபாலன முறை போன்றவை கடும் பிரச்னையை சந்தித்து வருகிறது. தேசத்தின் அடிப்படை தத்துவங்களை மாற்றி பாசிச சர்வாதிகார கொள்கையை ஆளும் பாஜ அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜனநாயக அமைப்புகளும் உரிமைக்காக போராடக்கூடிய தலைவர்களும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கூடிய அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.