புதுடெல்லி: இந்தியாவில் இன்னும் 4 கோடி பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை கூட செலுத்தவில்லை என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். மக்களவையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்தார். அதில் அவர், ‘ஜூலை 18ம் தேதி வரையில் அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 178 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதம். இன்னும் 4 கோடி பேர் ஒரு டோஸ் கூட செலுத்தவில்லை.