தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக ரயில்கள்  தாமதமாக செயல்பட்டுள்ளது. நேற்று இரவு சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழை  மற்றும் பலத்த காற்றின் காரணமாக சென்னை புறநகர் மின்சார சேவையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு நோக்கி இயக்கபடக்கூடிய புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மருமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக  கடற்கரை நோக்கி இயக்கபடக்கூடிய மின்சார ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை முதல் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லக்கூடிய ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ரயில்கள் அனைத்துமே அரைமணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்கள் இயக்கம் என்பது தாமதமானது.  பின்னர் சிகனல் கோளாறு சரி செய்யப்பட்டு அரைமணி நேரத்திற்கு பிறகு ரயில்கள்  அனைத்தும் இயக்கப்பட்டது.  இதன் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் பெருவாரியாக  குவிந்துள்ளனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத சூழலை பார்க்க முடிகிறது.

Related Stories: