சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘இரவின் நிழல்’ படம் திரைக்கு வந்தது. இந்நிலையில், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தேறிய அவர், தற்போது மீண்டும் தன்னை கொரோனா தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளர். இதுபற்றி நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், ‘நான் எடுத்து வந்த எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி தற்போது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.