அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி திருமால் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முதல் தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் சீனிவாசன் (43), நேற்று இவரது வீட்டில் இருந்த கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சீனிவாசன் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் சீனிவாசன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. சீனிவாசன் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் அதிகபோதையில் இறந்து போனாரா அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணத்தில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: