திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் 2வது வட்ட மாநாடு நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் வேணு வரவேற்றார். இந்த மாநாட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு விழா சிறப்புரையாற்றினார். மாநாட்டின் நோக்கம் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் விளக்க உரையாற்றினார். இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக வழங்க வேண்டும்.