சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி போர் பாயிண்ட்ஸ் - ஷெரட்டன் ரிசார்ட்டில் நடக்க உள்ளது. இதனை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் வந்து ஆய்வு நடத்தினார். மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் - ஷெரட்டன் ரிசார்ட்டில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில், 188 நாடுகளை சேர்ந்த 343 அணிகள், 2500க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.இந்நிலையில், போட்டி நடக்க உள்ள ரிசார்ட்டில் பழைய அரங்கம், செஸ் போர்டு டேபிள், வாகன நிறுத்துமிடம், 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய அரங்கம், சாலை அமைக்கும் பணி, மீடியாவுக்காக வாகனம் நிறுத்தம், பல்வேறு பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது.