சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து முகக்கவசம் அணிதல் கட்டாயம் என அறிவித்து முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 10% நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசம் என கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.