தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து முகக்கவசம் அணிதல் கட்டாயம் என அறிவித்து முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 10% நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசம் என கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு உடல் சோர்வு இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்தேன். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் கூறியுள்ளார்.

Related Stories: