பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஆக.10ல் ஆஜராக வேண்டும்: நீதிபதி உத்தரவு

செங்கல்பட்டு: பாலியல் வழக்கில் கைதான, சிவசங்கர் பாபா மீண்டும் ஆக. 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென,  போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியின் நிறுவனரும், பிரபல சாமியாரான சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ உள்ளிட்ட எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாமீனில் வெளிவந்த சிவசங்கர் பாபா ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் போக்சோ வழக்கின் விசாரணைக்காக நேற்று  செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.  இதுதொடர்பாக,  விசாரணை நடத்திய நீதிபதி தமிழரசி, ஆகஸ்ட் 10ம் தேதி சிவசங்கர் பாபா ஆஜராக வேண்டும் என  உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: