பெரம்பூர்: கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், 6வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இவர்கள் இருவரும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, கடையில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். நேற்று வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, குப்பைகளை அகற்றும் பொக்லைன் இயந்திரம் இடித்து பார்வதி தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.