சென்னை: சென்னை விமான நிலையத்தில் சீா்ப்படுத்தப்பட்ட ப்ராவோ ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ப்ராவோ ஓடுபாதை வலைவாக இருந்ததால் முதன்மை ஓடுபாதைக்கு விமானம் வருவதற்கு கூடுதல் நேரம் பிடித்தது. இதனால், எாிப்பொருள் அதிகமாக செலவானது. இதன் காரணமாக ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டது. 90 சதவீகித உள்நாட்டு சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து நடைப்பெற்று வரும் முதன்மை ஓடுபாதைக்கு இணையானதாக ப்ராவோ ஓடுபாதை இருக்கும். சீா்படுத்தப்பட்ட ப்ராவோ ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.