சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுக: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஜூலை மாதத்திற்குள்ளாகவே தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தினார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

Related Stories: