சென்னை: சிறப்பான ஆட்சி நடத்துவதாக கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர். ரசிகரை செல்போனில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வேலூர் சென்றிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு வேலூர் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் ரசிகரும், ஆட்டோ ஓட்டுநருமான பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான தான், தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றும் ஆனால் கூறியது போலவே தாங்கள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.