ஏற்காடு : ஏற்காட்டில் 2வது நாளாக கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு வழங்கி, மலர் கண்காட்சி நடைபெற்ற நிலையில், ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷண நிலை மாறியுள்ளது. கடந்த இரு நாட்ளாக ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.