திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (13ம் தேதி) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி, மறுநாள் 14ம்தேதி அதிகாலை 12.52 மணிக்கு நிறைவடைகிறது.எனவே 13ம்தேதி இரவு கிரிவலம் செல்வது உகந்ததாகவும், பவுர்ணமி கிரிவலம் அமைந்துள்ள 2 நாட்களும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை, 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: