காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.