ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் அருகே நேற்று அதிகாலை பனப்பாக்கம் வனப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், புள்ளிமான் அடிபட்ட அதே இடத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது. இளைஞர்கள் சிலர் சுற்றுலா சென்று விட்டு வாகனத்தில் திரும்பும்போது புள்ளிமான் சாலையில் அடிபட்டு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் சிலரும் கூடியுள்ளனர். மேலும், உடனடியாக அவர்களும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் வராததால் புள்ளிமான் பொதுமக்கள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தது.