தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த வானிலை நிலவும் நிலையில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று  ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறது.

காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி, நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: